குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே பல்வேறு இடங்களில் மண் சரிந்து பாறைகள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
இதனால் மலை ரயிலில் பயணிக்க ஆவலுடன் செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைவர். இந்த சூழலில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில் பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. இதனால் குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் பாதையில் சீரமைப்பு பணிகளை ரயில்வே பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.